என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் மின்சார கட்டணத்தில் மானியம்: கெஜ்ரிவால்
Byமாலை மலர்6 May 2022 3:41 AM GMT (Updated: 6 May 2022 3:41 AM GMT)
மின்சார கட்டணத்திற்கான மானியத்தை தொடர விரும்புகிறீர்களா என்று குடிமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும், இது தொடர்பான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறினார்.
புதுடெல்லி :
தலைநகர் டெல்லியில் புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் அரசாங்கத்தின் நிதி உதவியை பெறும் வகையிலான புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், டெல்லியை தொழில் முனைவோருக்கான தலைநகரமாக மாற்றுவதே ஆம் ஆத்மி அரசின் லட்சியம் என குறிப்பிட்டார்.
மேலும் டெல்லியில் தற்போது குடியிருப்பு வாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார கட்டணத்திற்கான மானியத்தை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பெறுகின்ற வகையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் தற்போது மின் நுகர்வோருக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 201 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தினால் ரூ.800 மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மின்சார கட்டணத்திற்கான மானியத்தை தொடர விரும்புகிறீர்களா என்று குடிமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும், இது தொடர்பான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார். இதன்படி, மின்சார கட்டண மானியத்தை பெற விரும்பும் நுகர்வோருக்கு மட்டுமே, வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல், மானியம் வழங்கப்படும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் அரசாங்கத்தின் நிதி உதவியை பெறும் வகையிலான புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், டெல்லியை தொழில் முனைவோருக்கான தலைநகரமாக மாற்றுவதே ஆம் ஆத்மி அரசின் லட்சியம் என குறிப்பிட்டார்.
மேலும் டெல்லியில் தற்போது குடியிருப்பு வாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார கட்டணத்திற்கான மானியத்தை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பெறுகின்ற வகையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் தற்போது மின் நுகர்வோருக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 201 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தினால் ரூ.800 மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மின்சார கட்டணத்திற்கான மானியத்தை தொடர விரும்புகிறீர்களா என்று குடிமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும், இது தொடர்பான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார். இதன்படி, மின்சார கட்டண மானியத்தை பெற விரும்பும் நுகர்வோருக்கு மட்டுமே, வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல், மானியம் வழங்கப்படும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X