search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கைது
    X
    கைது

    கள்ளக்காதல் என சந்தேகித்து மனைவியை கொலை செய்த கணவன் கைது

    கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
    உத்தர பிரதசேம் மாநிலம் ரசூல்பூரில் உள்ள நயா ரசூல் பகுதியில் கள்ளக்காதல் இருப்பதாக சந்தேகித்து தனது 28 வயதான மனைவியை கணவர் கத்தியால் குத்தி கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து துணைக் காவல் கண்காணிப்பாளர் (நகரம்) முகேஷ் சந்திர மிஸ்ரா கூறியதாவது:-

    கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் தனது மனைவியை அண்டை வீட்டாருடன் பார்த்ததாக கூறி கோபமடைந்தார்.

    பின்னர் அதே வேகத்தில் வந்த அவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். ஆனால், உள்ளூர்வாசிகள் அவரைப் பிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர்.  

    இந்த தம்பதிக்கு ஐந்து மற்றும் ஏழு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்- அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
    Next Story
    ×