என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கொரோனா அதிகரிப்பு- உத்தர பிரதேச மாநிலம் கௌதம புத்தா நகரில் 144 தடை உத்தரவு அமல்
Byமாலை மலர்1 May 2022 10:50 PM GMT (Updated: 1 May 2022 10:50 PM GMT)
பொது இடங்களில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், பொது மக்கள் ஒன்று கூடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கௌதம் புத்த நகர்:
டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், அரியானா உள்பட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
நேற்றைய காலை நிலவரப்படி டெல்லியில் அதிகபட்சமாக 1,520 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அரியானாவில் 490, உத்தர பிரதேசத்தில் 275, மகாராஷ்டிரத்தில் 155, கர்நாடகாவில் 126 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில், வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு மே 1 முதல் 31 வரை
உத்தர பிரதேச மாநிலம் கௌதம புத்தா நகரில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளதுடன், பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகளின் போது பள்ளிகளில் சமூக இடைவெளி பராமரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி யாரும் போராட்டங்கள் அல்லது உண்ணாவிரதப் போராட்டம் நடத்த கூடாது. வழிபாட்டுத் தளங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், பொது இடங்களில் பூஜைகள் நடத்த அனுமதிக்கப்படாது என்றும் அந்நகர காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... கொரோனா 4வது அலை உருவாக வாய்ப்பே இல்லை- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் உறுதி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X