என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
உ.பியில் பரபரப்பு: பணியில் சேர்ந்த முதல் நாளே தூக்கில் தொங்கிய செவிலியர்
Byமாலை மலர்1 May 2022 8:50 AM GMT (Updated: 1 May 2022 8:50 AM GMT)
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தின் பங்கர்மாவ் பகுதியில் உள்ள நியூ ஜீவன் நர்சிங் ஹோம் என்கிற முதியோர் இல்லத்தில் செவிலியராக 18 வயது இளம்பெண் சேர்ந்துள்ளார். இவர் நேற்று பணிக்கு சேர்ந்த நிலையில் இன்று காலை முதியோர் இல்லத்தின் தூணில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் செவிலியரின் சடலத்தை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், இதன் பின்னணியில் முதியோர இல்லத்தின் மேலாளர் இருப்பதாகவும் அவரது தாய் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கற்பழிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும், செவிலியரின் தாய் அளித்த புகாரின்பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் மூன்று பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்.. தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகளை தெரிவித்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா
இது குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் செவிலியரின் சடலத்தை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், இதன் பின்னணியில் முதியோர இல்லத்தின் மேலாளர் இருப்பதாகவும் அவரது தாய் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கற்பழிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும், செவிலியரின் தாய் அளித்த புகாரின்பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் மூன்று பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்.. தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகளை தெரிவித்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X