search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிலக்கரி
    X
    நிலக்கரி

    இந்தியாவிடம் 2.23 கோடி டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது - ராகுலுக்கு மத்திய மந்திரி பதிலடி

    பிரதமர் மோடி அவர்களே வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்திவிட்டு மின் உற்பத்தி நிலையங்களை திறக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோல் இந்திய நிறுவனத்திற்கும், இந்திய ரெயில்வே துறைக்கும் இடையேயான முரண்பாடுகளைத் தவிா்த்து, நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இதற்கிடையே, 8 நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டு வந்து மத்திய அரசு நிறுத்தியுள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் டுவிட்டர் செய்திக்கு மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ராகுல் காந்தி 8 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளது என தெரிவித்திருந்தார். அவருக்கு எந்த தகவலும் முழுமையாக கிடைப்பதில்லை. நம்மிடம் 2.23 கோடி டன்கள் நிலக்கரி கையிருப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×