search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, மம்தா பானர்ஜி
    X
    மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, மம்தா பானர்ஜி

    வகுப்புவாத வன்முறை... பிரதமரின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது -எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை

    வெறுப்பு கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலை அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர்.
    புதுடெல்லி:

    சமீப காலங்களில் நடந்த வகுப்புவாத வன்முறை மற்றும் வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

    உணவு, உடை , நம்பிக்கை, பண்டிகை மற்றும் மொழியை பயன்படுத்தி ஒரு பிரிவினர் பிரச்சினையை தூண்டுகின்றனர்.  நாட்டின் பல மாநிலங்களில் அண்மையில் வெடித்த வகுப்புவாத வன்முறையை கண்டிக்கிறோம். மத ரீதியாக பிரித்தாள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடித்து மக்கள் அமைதி காக்க வேண்டும். 

    வெறுப்பு கருத்துகள் குறித்த பிரதமரின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது. வெறுப்பு கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளனர்.
    Next Story
    ×