search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    போலீஸ் கமிஷனா் கமல்பந்த்
    X
    போலீஸ் கமிஷனா் கமல்பந்த்

    பெங்களூருவில் இன்று முதல் 4 நாட்கள் மதுக்கடைகள் திறக்க தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு

    பெங்களூருவில் ஏப்ரல் 11-ந் தேதி (அதாவது இன்று), 12-ந் தேதி (நாளை) அல்சூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கவும், மதுபானம் விற்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    பெங்களூரு:

    பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பெங்களூரு அல்சூரில் உள்ள கோதண்டராமர் கோவிலில் பல்லக்கு உற்சவத்தையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏப்ரல் 11-ந் தேதி (அதாவது இன்று), 12-ந் தேதி (நாளை) அல்சூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கவும், மதுபானம் விற்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதுபோல முத்தியாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி கமர்சியல் தெரு, புலிகேசிநகர், சிவாஜிநகர், டி.ஜே.ஹள்ளி ஆகிய போலீஸ் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 13, 14-ந் தேதிகளில் மதுக்கடைகளை திறக்கவும், மதுபானம் விற்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×