என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஜம்மு-காஷ்மீரில் உள்கட்டமைப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது- நிதின் கட்கரி தகவல்
Byமாலை மலர்5 April 2022 11:43 PM GMT (Updated: 6 April 2022 12:38 AM GMT)
எதிர்காலத்தில் ஸ்ரீநகரில் இருந்து வெறும் 8 மணி நேரத்தில் டெல்லியை மக்கள் சென்றடைய முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புது தில்லி:
தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் இயக்குனரை கவுரவிப்பதற்காக, இந்திய சர்வதேச மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி பேசியதாவது:
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பல முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இது இந்த பிராந்தியத்தின் இணைப்பை மேம்படுத்தும். நாங்கள் காஷ்மீர் மற்றும் லடாக் இடையே ஆசியாவின் மிக நீளமான சுரங்கப் பாதையை உருவாக்குகிறோம்.
லே-மனாலி வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப் பாதை ஏற்கனவே பயண நேரத்தைக் குறைத்துள்ளது. ஸ்ரீநகர்-கத்ரா-டெல்லி விரைவுச் சாலையின் பணியும் நடைபெற்று வருகிறது.
எதிர்காலத்தில் ஸ்ரீநகரில் இருந்து டெல்லியை எட்டு மணி நேரத்தில் மக்கள் சென்றடைவார்கள். நல்ல உள்கட்டமைப்பு வசதி இருந்தால் காஷ்மீருக்கு அதிகமான மக்கள் வருவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X