search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    அந்தமான் நிகோபாரில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    அந்தமான்  நிகோபார் தீவுகளில் உள்ள திக்லிபூர் பகுதியில் இன்று அதிகாலை 2.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. 

    ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், திக்லிபூரில் இருந்து வடக்கே 147 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
     
    இந்த நிலநடுக்கத்தின் விளைவாக உயிரிழப்போ, உடமைகள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
     
    Next Story
    ×