என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
விமானியின் சாதுர்யத்தால்தான் உயிர் பிழைத்தேன்- மம்தா பானர்ஜி பேட்டி
Byமாலை மலர்7 March 2022 5:25 PM GMT (Updated: 7 March 2022 5:25 PM GMT)
தான் பயணித்த விமானத்தின் எதிரே மற்றொரு விமானம், திடீரென்று வந்ததால் இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் மோதும் நிலை இருந்ததாக மம்தா பானர்ஜி கூறினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசாரம் செய்துவிட்டு, கொல்கத்தாவுக்கு திரும்பியபோது அவர் பயணம் செய்த விமானம் திடீரென கடுமையாக குலுங்கியது. இதில், மம்தாவுக்கு உள்காயம் ஏற்பட்டது.
எனினும், விமானி சாமர்த்தியமாக விமானத்தை செலுத்தி, கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். இது குறித்து விரிவான அறிக்கை கேட்டு, மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு, மேற்கு வங்காள அரசு கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், சம்பவம் நடந்து 2 நாட்கள் கழித்து முதல்வர் மம்தா பானர்ஜி
கூறியதாவது:-
நான் பயணித்த விமானத்தின் எதிரே மற்றொரு விமானம், திடீரென்று வந்தது. அடுத்த 10 வினாடிகள் இதே நிலை தொடர்ந்திருந்தால் இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால் விமானியின் சாதுர்யத்தால்தான் நான் உயிர் பிழைத்தேன். விமானம் 6,000 அடி கீழே இறங்கியது. இதனால் எனக்கு காயம் ஏற்பட்டது. இன்னும் வலி இருக்கிறது. சம்பவம் தொடர்பாக இதுவரை ஏடிசி மற்றும் டிஜிசிஏவிடம் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X