என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
உ.பி.யில் நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதி: மாயாவதி திட்டவட்டம்
Byமாலை மலர்24 Feb 2022 2:59 AM GMT (Updated: 24 Feb 2022 2:59 AM GMT)
சமாஜ்வாடி ஆட்சியில் இருந்தபோதெல்லாம் அனைத்து தரப்பினரும் துன்புறுத்தப்பட்டனர். கலவரம் வெடித்தது, குண்டர்கள் ராஜ்யம் நடந்தது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
லக்னோ :
உத்தரபிரதேச சட்டசபைக்கு நேற்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி லக்னோவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பகுஜன் சமாஜ் கட்சி இன்னும் தனது ஆதரவை தக்கவைத்திருப்பதாக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதற்கு நன்றி. ஆனால், தலித் ஓட்டுகளை மட்டுமின்றி, முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டோர், உயர் சாதியினர் என அனைத்து தரப்பினரின் ஓட்டுகளையும் பெற்று வருகிறோம். அதனால், மார்ச் 10-ந் தேதி ஓட்டு எண்ணும்போது பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை பிடித்திருப்பதை பார்ப்பீர்கள். கடந்த 2007-ம் ஆண்டைப்போல், முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்.
ஆட்சியை பிடிப்பதாக சமாஜ்வாடி கட்சி காணும் கனவு நொறுங்கி விடும். சமாஜ்வாடி ஆட்சியில் இருந்தபோதெல்லாம் அனைத்து தரப்பினரும் துன்புறுத்தப்பட்டனர். கலவரம் வெடித்தது, குண்டர்கள் ராஜ்யம் நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்தரபிரதேச சட்டசபைக்கு நேற்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி லக்னோவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பகுஜன் சமாஜ் கட்சி இன்னும் தனது ஆதரவை தக்கவைத்திருப்பதாக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதற்கு நன்றி. ஆனால், தலித் ஓட்டுகளை மட்டுமின்றி, முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டோர், உயர் சாதியினர் என அனைத்து தரப்பினரின் ஓட்டுகளையும் பெற்று வருகிறோம். அதனால், மார்ச் 10-ந் தேதி ஓட்டு எண்ணும்போது பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை பிடித்திருப்பதை பார்ப்பீர்கள். கடந்த 2007-ம் ஆண்டைப்போல், முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்.
ஆட்சியை பிடிப்பதாக சமாஜ்வாடி கட்சி காணும் கனவு நொறுங்கி விடும். சமாஜ்வாடி ஆட்சியில் இருந்தபோதெல்லாம் அனைத்து தரப்பினரும் துன்புறுத்தப்பட்டனர். கலவரம் வெடித்தது, குண்டர்கள் ராஜ்யம் நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X