என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
திருப்பதியில் பிப்ரவரி 15-ந்தேதிக்கு பிறகு நேரடியாக இலவச தரிசனம்?
Byமாலை மலர்29 Jan 2022 7:32 AM GMT (Updated: 29 Jan 2022 8:50 AM GMT)
கொரோனா தொற்று தற்போது குறைந்து வருவதால் பிப்ரவரி 15-ந்தேதிக்கு பிறகு திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நேரடியாக தரிசன டிக்கெட்டுகள் வழங்க திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்டன.
ஒரு நாளைக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 28 நாட்களுக்கு 3.36 லட்சம் டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.
ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட அரை மணிநேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.
இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் பிப்ரவரி மாதம் 15-ந்தேதி வரை 1.50 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
பிப்ரவரி மாதம் 28-ந்தேதி வரை இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை ஆன்லைனில் வெளியிடப்பட்ட இலவச தரிசன டிக்கெட்டுகள் பிப்ரவரி 15-ந் தேதி வரை மட்டுமே வெளியிடப்பட்டன.
தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பிப்ரவரி 15-ந்தேதிக்கு பிறகு திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நேரடியாக தரிசன டிக்கெட்டுகள் வழங்க திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது.
அதனடிப்படையிலேயே இன்று ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் பிப்ரவரி 15-ந்தேதி வரை வழங்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்டன.
ஒரு நாளைக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 28 நாட்களுக்கு 3.36 லட்சம் டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.
ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட அரை மணிநேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.
இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் பிப்ரவரி மாதம் 15-ந்தேதி வரை 1.50 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
பிப்ரவரி மாதம் 28-ந்தேதி வரை இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை ஆன்லைனில் வெளியிடப்பட்ட இலவச தரிசன டிக்கெட்டுகள் பிப்ரவரி 15-ந் தேதி வரை மட்டுமே வெளியிடப்பட்டன.
தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பிப்ரவரி 15-ந்தேதிக்கு பிறகு திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நேரடியாக தரிசன டிக்கெட்டுகள் வழங்க திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது.
அதனடிப்படையிலேயே இன்று ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் பிப்ரவரி 15-ந்தேதி வரை வழங்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X