என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பட்ஜெட் பணிகள் தொடக்கம் - கொரோனா பரவலால் அல்வா கிண்டவில்லை
Byமாலை மலர்27 Jan 2022 8:27 PM GMT (Updated: 27 Jan 2022 8:27 PM GMT)
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மத்திய பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டானது அதிகமான பக்கங்களில் அச்சிடப்பட்டு துணிப்பைகளில் கட்டப்படும். இந்த அச்சிடும் பணிகள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சுமார் 2 வாரங்களுக்கு முன்பே தொடங்கி விடும். இதன் தொடக்க நிகழ்வாக அல்வா தயாரிக்கும் பணி நடக்கிறது.
இதில் நிதி மந்திரி மற்றும் இணை மந்திரிகள் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியுடன் தொடங்கும் பட்ஜெட் அச்சிடும் பணிகளில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை தனிமைப்படுத்தப்படுகின்றனர். குடும்பத்தினருடன் தொலைபேசியில் கூட பேச அனுமதி கிடையாது.
கடந்த ஆண்டு கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு டிஜிட்டல் முறையில் பட்ஜெட் ஆவணங்களை உருவாக்கி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் நேற்று தொடங்கின.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அல்வா தயாரிப்பு நிகழ்ச்சி இந்த ஆண்டு கிடையாது. பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதையும் படியுங்கள்...வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கொரோனா தொற்று
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X