என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பத்ம விருதை பெற மறுக்கும் மற்றொரு பிரபலம்
Byமாலை மலர்26 Jan 2022 8:14 AM GMT (Updated: 26 Jan 2022 8:14 AM GMT)
ஏற்கனவே பத்ம விருதுகளை ஏற்கப்போவதில்லை என மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியிருந்தார்.
கொல்கத்தா:
நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2022- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில் மேற்கு வங்காள மாநில பின்னணி பாடகி சந்தியா முகர்ஜியின் பெயர் பத்மஸ்ரீ விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் தனக்கு பத்மஸ்ரீ விருது வேண்டாம் என சந்தியா முகர்ஜி நிராகரித்துள்ளார். இது குறித்து அவரது மகள் சவுமி சென் குப்தா கூறியதாவது: -
90 வயதில் விருது வழங்குவது தன்னை அவமதிப்பது போல இருப்பதாக சந்தியா முகர்ஜி கூறினார். பத்ம விருதுகள் போன்றவை இளம் வயதில் உள்ள கலைஞர்களுக்கு கிடைக்க வேண்டியது. அதனால் இந்த விருதுகளை நிராகரிக்கிறார்.
இந்த விருதை நிராகரிப்பதில் எந்தவித அரசியல் பின்புலமும் இல்லை. காலம் கடந்து சாதனை படைத்த கலைஞர்களை கௌரவிப்பதை எதிர்க்கவே இந்த விருதை பெற மறுக்கிறார்.
இவ்வாறு சவுமி சென் குப்தா கூறினார்.
ஏற்கனவே பத்ம விருதுகளை ஏற்கப்போவதில்லை என மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறிய நிலையில், தற்போது அதே மாநிலத்தை சேர்ந்த மற்றொரு பிரபலமும் பத்ம விருதை ஏற்க மறுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X