என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் - இரண்டு அவைகளும் வெவ்வேறு நேரங்களில் செயல்படும் என தகவல்
Byமாலை மலர்24 Jan 2022 10:07 PM GMT (Updated: 25 Jan 2022 12:59 AM GMT)
கொரோனா கட்டுப்பாடுகளையொட்டி மக்களவை மற்றும் மாநிலங்களவை தனித் தனி நேரங்களில் தலா ஐந்து மணி நேரம் செயல்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி :
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது. முன்னதாக ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவார். பட்ஜெட் கூட்டத் தொடரின் போது கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை தனித் தனி நேரங்களில் செயல்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி மாநிலங்களவை காலை 9 மணிக்கும், மக்களவை மாலை 4 மணிக்கும் கூடும் என்று கூறப்படுகிறது. தலா ஐந்து மணி நேரம் இரு அவைகளும் இயங்கும் என்று தெரிகிறது. இந்த புதிய நெறிமுறை பிப்ரவரி 2 முதல் நடைமுறைக்கு வரும். கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 11ஆம் தேதி முடிவடையும் வரை இது அமல்படுத்தப் படுகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறும். கொரோனா பரவல் அதிகரிப்பை கருத்தில் கொண்டு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பார்வையாளர்கள் பகுதியும் உறுப்பினர்கள் அமரும் வகையில் பயன்படுத்தப்படும் என்று மக்களவைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X