என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
எதிர்மறையான மனநிலையிலிருந்து சமூகம் மாற வேண்டும் - தேசிய மகளிர் ஆணையம் வேண்டுகோள்
Byமாலை மலர்24 Jan 2022 7:06 PM GMT (Updated: 24 Jan 2022 7:06 PM GMT)
ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்களின் திறமைகளை நிரூபித்துள்ளனர் என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டு தோறும் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொடடி நேற்று பெண் குழந்தை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கிற்கு மகளிருக்கான தேசிய ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. இணைய வழியே நடைபெற்ற இந்த கருத்தரங்கில், பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கவும், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து உட்பட பெண் குழந்தைகள் தொடர்பான பல்வேறு விஷயங்களில் விழிப்புணர்வை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில் பேசிய தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளதாவது:
ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்களின் திறமைகளை நிரூபித்துள்ளனர். மகளிருக்கான தேசிய ஆணையம் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஒவ்வொரு தளத்திலும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பும், அதிகாரமளித்தலும் உறுதி செய்யப்படுகிறது. தரமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்த இளம்பெண்களுக்கு மத்திய அரசு வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால் எதிர்மறையான மனநிலையிலிருந்து சமூகம் மாற வேண்டிய அவசியம் உள்ளது. எனவே இளம்பெண்கள் முன்வந்து மாற்றத்தின் முகவர்களாகத் திகழ வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X