என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பாகிஸ்தானில் புழுதிப்புயல் எதிரொலி: மும்பையில் காற்று மாசு அதிகரிப்பு
Byமாலை மலர்24 Jan 2022 2:57 AM GMT (Updated: 24 Jan 2022 2:57 AM GMT)
மும்பை உள்பட புறநகர் பகுதிகளான தானே, நவிமும்பை, வசாய், பால்கர் போன்ற கடற்கரை பகுதிகளில் புழுதிப்புயல் காணப்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றனர்.
மும்பை :
பாகிஸ்தான் கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதன் காரணமாக நேற்று மும்பை உள்பட புறநகர் பகுதியில் நேற்று காலை முதலே புழுதிப்புயல் விளைவு காணப்பட்டது. இதனால் மும்பையில் காற்றின் தரம் குறைந்து உள்ளது. மலாடு மற்றும் மஜ்காவ் பகுதியில் காற்றின் தரகுறியீடு 300-க்கு மேல் அதிகமாக தாண்டியது.
இது பற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் காரணமாக மும்பையில் அதன் பாதிப்பை உணரமுடிந்தது.
12 மணி நேரம் வரையில் புயலின் தாக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மும்பையில் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்று வீசக்கூடும் என ெதரிவித்தார்.
நேற்று மும்பை உள்பட புறநகர் பகுதிகளான தானே, நவிமும்பை, வசாய், பால்கர் போன்ற கடற்கரை பகுதிகளில் புழுதிப்புயல் காணப்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றனர். இதன் காரணமாக மும்பை நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளானதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதன் காரணமாக நேற்று மும்பை உள்பட புறநகர் பகுதியில் நேற்று காலை முதலே புழுதிப்புயல் விளைவு காணப்பட்டது. இதனால் மும்பையில் காற்றின் தரம் குறைந்து உள்ளது. மலாடு மற்றும் மஜ்காவ் பகுதியில் காற்றின் தரகுறியீடு 300-க்கு மேல் அதிகமாக தாண்டியது.
இது பற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் காரணமாக மும்பையில் அதன் பாதிப்பை உணரமுடிந்தது.
12 மணி நேரம் வரையில் புயலின் தாக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மும்பையில் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்று வீசக்கூடும் என ெதரிவித்தார்.
நேற்று மும்பை உள்பட புறநகர் பகுதிகளான தானே, நவிமும்பை, வசாய், பால்கர் போன்ற கடற்கரை பகுதிகளில் புழுதிப்புயல் காணப்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றனர். இதன் காரணமாக மும்பை நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளானதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X