என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மெடிக்கல் ஸ்டோரில் பார்சல் வெடிகுண்டு வெடித்தது- 4 பேர் படுகாயம்
Byமாலை மலர்22 Jan 2022 9:02 AM GMT (Updated: 22 Jan 2022 10:43 AM GMT)
இந்த தாக்குதலில் எலக்ட்ரிக் ரிக்ஷா டிரைவர் மற்றும் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹெம்தாபாத்:
மேற்கு வங்காள மாநிலம் உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோரில் பார்சல் குண்டு திடீரென வெடித்து சிதறியது. இதில், 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளிக்கிழமை மதியம் ஹெம்தாபாத்தில் உள்ள பஹரைல் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் எலக்ட்ரிக் ரிக்ஷா டிரைவர் மற்றும் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபற்றி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வெடிகுண்டு பார்சலை எலக்ட்ரிக் ரிக்ஷா டிரைவர், மருந்தகத்தில் கொடுத்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் ஒரு பெண்ணுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இருவரையும் தேடி வருகிறோம். வெடிகுண்டின் சிதைந்த பாகங்கள் மற்றும் பார்சல் பெட்டியின் மாதிரிகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X