என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
காங்கிரசில் யார் வேண்டுமானாலும் இணையலாம்: டி.கே.சிவக்குமார்
Byமாலை மலர்22 Jan 2022 3:12 AM GMT (Updated: 22 Jan 2022 3:12 AM GMT)
கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு காங்கிரசில் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :
துமகூரு மாவட்டத்தை சேர்ந்த ஜனதாதளம்(எஸ்) கட்சியின் முன்னாள் மேல்-சபை உறுப்பினரான காந்தராஜ் நேற்று காலையில், பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த காந்தராஜ், காங்கிரசின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு கட்சியில் இணைந்திருக்கிறார். இதுபோல், கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு காங்கிரசில் யார் வேண்டுமானாலும் இணையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘காங்கிரஸ் பாதயாத்திரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 85 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு கூறி வருகிறது. பாதயாத்திரையை தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. தற்போது மக்களிடம் தவறான தகவல்களை பரப்ப போலீசாருக்கு கொரோனா பாதிப்பு வந்ததாக கூறி வருகின்றனர். பாதயாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் எந்த ஒரு போலீசாரும் இல்லை. போலீசார் பாதுகாப்பு பணியிலேயே ஈடுபடாத போது, அவர்களுக்கு எப்படி கொரோனா பாதிப்பு ஏற்படும்’’ என்றார்.
துமகூரு மாவட்டத்தை சேர்ந்த ஜனதாதளம்(எஸ்) கட்சியின் முன்னாள் மேல்-சபை உறுப்பினரான காந்தராஜ் நேற்று காலையில், பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த காந்தராஜ், காங்கிரசின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு கட்சியில் இணைந்திருக்கிறார். இதுபோல், கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு காங்கிரசில் யார் வேண்டுமானாலும் இணையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘காங்கிரஸ் பாதயாத்திரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 85 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு கூறி வருகிறது. பாதயாத்திரையை தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. தற்போது மக்களிடம் தவறான தகவல்களை பரப்ப போலீசாருக்கு கொரோனா பாதிப்பு வந்ததாக கூறி வருகின்றனர். பாதயாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் எந்த ஒரு போலீசாரும் இல்லை. போலீசார் பாதுகாப்பு பணியிலேயே ஈடுபடாத போது, அவர்களுக்கு எப்படி கொரோனா பாதிப்பு ஏற்படும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X