search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரியங்கா காந்தி
    X
    பிரியங்கா காந்தி

    உ.பி சட்டசபை தேர்தல் - முதல் மந்திரி வேட்பாளரா பிரியங்கா காந்தி?

    உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலில் 40 சதவீத பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பிரியங்கா காந்தி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக உள்ளது.

    கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச தேர்தலில் 403 இடங்களில், வெறும் 7 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்தமுறை பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. 

    இதற்கிடையே, உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று வெளியிட்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வை என்பது உத்தர பிரதேசத்தில் இருந்து தொடங்கவேண்டும். இளைஞர்களின் வலிமையில் புதிய உத்தர பிரதேசத்தை கட்டமைக்க விரும்புகிறோம் என தெரிவித்தார்.  

    உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னிறுத்தப்பட கூடிய முதல்-மந்திரி வேட்பாளர் யார்? என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.

    இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பிரியங்கா காந்தி அளித்த பதிலில், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய வேறு யாருடைய முகமும் உங்களுக்கு தென்பட்டதா? ஒவ்வோர் இடத்திலும் என்னுடைய முகம் இருப்பதை நீங்கள் காணலாம் என பதிலளித்தார்.

    இதன்மூலம் வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல் மந்திரி வேட்பாளராக பிரியங்கா காந்தியே முன்னிறுத்தப்படலாம் என நம்பப்படுகிறது.

    Next Story
    ×