என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
புதிய பாராளுமன்ற கட்டுமான செலவு ரூ.1,250 கோடியாக உயர்வு
Byமாலை மலர்21 Jan 2022 9:38 AM GMT (Updated: 21 Jan 2022 9:38 AM GMT)
கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்ற கட்டுமான பணிகளில் தாமதமும், கூடுதல் செலவீனமும் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.282 கோடி அதாவது, ரூ.1,250 கோடி வரை செலவாகும் என்று தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
1927-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து வருகிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
தற்போதைய பாராளுமன்றம் அருகிலேயே புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. டாடா நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டும் பொறுப்பை ஏற்றுள்ளது. அப்போது ரூ.977 கோடி செலவில் புதிய பாராளுமன்றத்தை கட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.
13 ஏக்கர் பரப்பளவில் 4 மாடிகளுடன் புதிய பாராளுமன்ற கட்டிடம் உருவாகிறது. இந்தியாவில் 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் சமயத்தில் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கட்டுமானப்பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் வருகிற அக்டோபர் மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்ற கட்டுமான பணிகளில் தாமதமும், கூடுதல் செலவீனமும் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.282 கோடி அதாவது, ரூ.1,250 கோடி வரை செலவாகும் என்று தெரிய வந்துள்ளது.
திட்டமிட்டதைவிட 29 சதவீதம் செலவு உயர்ந்துள்ளது. புதிய பாராளுமன்றத்தில் மக்களவையில் 888 பேரும், மாநிலங்களவையில் 384 பேரும் அமரும் வசதி உள்ளது. ஒரேநேரத்தில் 1200-க்கும் மேற்பட்டவர்கள் புதிய பாராளுமன்றத்தில் அமர முடியும்.
தலைநகர் டெல்லியில் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
1927-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து வருகிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
தற்போதைய பாராளுமன்றம் அருகிலேயே புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. டாடா நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டும் பொறுப்பை ஏற்றுள்ளது. அப்போது ரூ.977 கோடி செலவில் புதிய பாராளுமன்றத்தை கட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.
13 ஏக்கர் பரப்பளவில் 4 மாடிகளுடன் புதிய பாராளுமன்ற கட்டிடம் உருவாகிறது. இந்தியாவில் 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் சமயத்தில் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கட்டுமானப்பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் வருகிற அக்டோபர் மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்ற கட்டுமான பணிகளில் தாமதமும், கூடுதல் செலவீனமும் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.282 கோடி அதாவது, ரூ.1,250 கோடி வரை செலவாகும் என்று தெரிய வந்துள்ளது.
திட்டமிட்டதைவிட 29 சதவீதம் செலவு உயர்ந்துள்ளது. புதிய பாராளுமன்றத்தில் மக்களவையில் 888 பேரும், மாநிலங்களவையில் 384 பேரும் அமரும் வசதி உள்ளது. ஒரேநேரத்தில் 1200-க்கும் மேற்பட்டவர்கள் புதிய பாராளுமன்றத்தில் அமர முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X