search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடற்படை கப்பல்
    X
    கடற்படை கப்பல்

    மும்பை - கடற்படை கப்பல் வெடி விபத்தில் 3 வீரர்கள் உயிரிழப்பு

    மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கடற்படை தளத்தில் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ரன்வீர் என்ற போர்க்கப்பல் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், ரன்வீர் கப்பலின் உள்பகுதியில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில்  3  கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
    மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

    கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. 

    Next Story
    ×