என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பில்லி சூனியம் வைத்ததாக சந்தேகம்- கணவன், மனைவியை கொன்ற உறவினர் கைது
Byமாலை மலர்18 Jan 2022 5:27 AM GMT (Updated: 18 Jan 2022 6:52 AM GMT)
கொல்லப்பட்ட தம்பதியரின் நெருங்கிய உறவினரான தயாராம் குலாஸ்தே என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஜபல்பூர்:
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் சவுராய் கிராமத்தில் சுமீர் சிங் குலாஸ்தே (வயது 60), அவரது மனைவி சியாபாய் (வயது 55) ஆகியோர் கடந்த 9ம் தேதி மர்மமான முறையில் கொல்லப்பட்டு உடல்கள் எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொல்லப்பட்ட தம்பதியரின் நெருங்கிய உறவினரான தயாராம் குலாஸ்தே (வயது 27) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பில்லி சூனியம் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த கொலையை செய்திப்பதாக தெரியவந்துள்ளது.
சுமீர் சிங் குலாஸ்தே, அவரது மனைவி சியாபாய் இருவரும் மாந்திரீக தொழில் செய்ததும், அவர்கள் பில்லி சூனியம் வைத்ததால் தனது சகோதரர் தற்கொலை செய்துவிட்டதாகவும் தயாராம் குலாஸ்தே சந்தேகப்பட்டுள்ளார். அதன் காரணமாக கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. மேலும், இருவருக்குமிடையே நிலப்பிரச்சனையும் இருந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X