search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாப்பிள்ளைக்கு 365 வகையான உணவுகள் பரிமாறிய காட்சி.
    X
    மாப்பிள்ளைக்கு 365 வகையான உணவுகள் பரிமாறிய காட்சி.

    ஆந்திராவில் பொங்கல் விருந்தாக மாப்பிள்ளைக்கு 365 வகையான உணவுகள் பரிமாறி அசத்திய தம்பதி

    பொங்கல் விருந்தாக மாப்பிள்ளைக்கு 365 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ராவ் இவரது மனைவி மாதவி. தம்பதிக்கு குந்தவி என்ற மகள் உள்ளார்.

    தனுக்கு பட்டணம் தும்மலப்பள்ளியை சேர்ந்த சாய் கிருஷ்ணாவுடன் குந்தவிக்கு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

    இவர்களுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி குந்தவியின் தாத்தா கோவிந்த், பாட்டி நாகமணி ஆகியோர் மாப்பிள்ளை சாய் கிருஷ்ணாவிற்கு விருந்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி விதவிதமான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் தயார் செய்யும் பணி நடந்தது.

    இதையடுத்து குந்தவி மற்றும் சாய் கிருஷ்ணாவை தங்களது வீட்டிற்கு வரவழைத்தனர்.

    அவர்களுக்கு 100 வகையான இனிப்புகள், 30 வகையான காய்கறிகள், 30 வகையான முறுக்கு, எல்லடை, சீடை மற்றும் பழங்கள் என 365 வகையான உணவுகள் தயார் செய்து பரிமாறப்பட்டது.

    பொங்கல் விருந்தாக மாப்பிள்ளைக்கு 365 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படியுங்கள்... எம்.ஜி.ஆர் பிறந்தநாள்- பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

    Next Story
    ×