என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
தினசரி பாதிப்பு குறைந்தது- நாடு முழுவதும் புதிதாக 2.58 லட்சம் பேருக்கு கொரோனா
Byமாலை மலர்17 Jan 2022 4:21 AM GMT (Updated: 17 Jan 2022 4:21 AM GMT)
கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 385 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2.58 லட்சமாக குறைந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,58,089 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 73 லட்சத்து 80 ஆயிரத்து 253 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் பாதிப்பு 2.71 லட்சமாக இருந்த நிலையில், நேற்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
கொரோனாவுக்கு நேற்று 385 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 451 ஆக உள்ளது.
நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 740 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 52 லட்சத்து 37 ஆயிரத்து 461-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தற்போது சிகிச்சை எடுத்துவருவோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 56 ஆயிரத்து 341-ஆக உள்ளது.
இந்தியாவில் தினசரி தொற்று விகிதம் 16.66 சதவீதத்தில் இருந்து 19.65 சதவீதமாக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 157 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X