search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜ.க.
    X
    பா.ஜ.க.

    பஞ்சாப் தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு பா.ஜ.க. கடிதம்

    குரு ரவிதாஸின் பிறந்தநாளையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் உத்தர பிரதேச மாநிலத்திற்கு செல்ல உள்ளதால் தேர்தல் தேதியை தள்ளிவைக்க கோரியுள்ளது பா.ஜ.க.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 14-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இந்த தேர்தல் தேதியை தள்ளி வைக்கவேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு, பஞ்சாப் மாநில பா.ஜ.க. கடிதம் எழுதியுள்ளது. அதில் பா.ஜ.க. கூறியதாவது:

    குரு ரவிதாஸின் பிறந்தநாள் பிப்ரவரி 16ம் தேதி வருகிறது. மாநிலத்தின் 32 சதவீத மக்கள் தொகை கொண்ட பட்டியல் சாதியைச் சேர்ந்த சில பிரதிநிதிகள் பிப்ரவரி 10 முதல் 16 வரை உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரசுக்கு செல்வார்கள். 

    அத்தகைய சூழ்நிலையில், இந்த சமூகத்தைச் சேர்ந்த பலர் மாநில சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியாது. வாக்களிப்பது அவர்களின் அரசியலமைப்பு உரிமை. அவர்களும் சட்டசபைத் தேர்தலில் பங்கேற்பதற்காக தேர்தல் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 

    ஏற்கனவே, முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் பஞ்சாப் தலைவர் ஜஸ்விர் சிங் கர்ஹியும் ஆகியோர் தேர்தல் தேதியை மாற்றுமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    Next Story
    ×