என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
அகிலேஷ் யாதவ் முன் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார் சுவாமி பிரசாத் மவுரியா
Byமாலை மலர்14 Jan 2022 9:14 AM GMT (Updated: 14 Jan 2022 9:14 AM GMT)
சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்ட பா.ஜ.க. அமைச்சர்கள். எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் விலகியது பா.ஜ.க. தலைமையை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சிகளும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான பா.ஜ.கவிற்கும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
இதற்கிடையே, பா.ஜ.க.வுக்கு சறுக்கல் ஏற்படும் வகையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.வும், மந்திரியுமான சுவாமி பிரசாத் மவுரியா மந்திரி, எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து மேலும் 6 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சுவாமி பிரசாத் மவுரியா இன்று அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் பா.ஜ.க.வில் இருந்து விலகிய தரம் சிங் சைனி, பகவதி சாகர், வினய் ஷக்யா உள்ளிட்டோரும் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர்.
இதையும் படியுங்கள்...பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X