search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி

    தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை வெகு கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

    தமிழர்கள் இன்று புத்தாடை உடுத்தி தங்கள் வீட்டின் முன் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். 

    இயற்கையுடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாகதற்கு நான் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

    Next Story
    ×