என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து- 3 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்13 Jan 2022 2:24 PM GMT (Updated: 13 Jan 2022 2:24 PM GMT)
தடம்புரண்ட பெட்டிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பிகானர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தோகோமணி அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டன. சில பெட்டிகள் கவிழ்ந்தன. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கோர விபத்தில் 3 பயணிகள் உயிரிழந்தனர். சுமார் 20 பேர் காயமடைந்தனர். தடம்புரண்ட பெட்டிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்து, அலிபூர்தார் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதியில், அலிபூர்தார் சந்திப்பில் இருந்து 90 கிமீ தொலைவில் இன்று மாலை 5 மணியளவில் நிகழ்ந்ததாக வடகிழக்கு ரெயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். விபத்து நடந்த பகுதிக்கு மருத்துவக் குழுவுடன் கூடிய விபத்து நிவாரண ரெயில் புறப்பட்டுச் சென்றிருப்பதாகவும் அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X