search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கொரோனாவில் இருந்து மெக்சிகோ அதிபர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து

    கடந்த ஆண்டு தொடக்கத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
    மெக்சிகோ சிட்டி:

    வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா தொற்றானது இரண்டாவது முறையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, அவர் தனது சமூக வலைதளத்தில் கூறுகையில், எனக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் லேசாக இருந்தாலும், நான் தனிமையிலேயே உள்ளேன். உடல்நிலை சரியாகும் வரை ஆன்லைன் வழியாக பணியினை மேற்கொள்வேன். உள்துறை செயலாளர் அடன் அகஸ்டோ லோபஸ் ஹெர்னாண்டஸ் என்னுடைய பிற பணிகளை மேற்கொள்வார் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×