search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய மந்திரி நிதின் கட்கரி
    X
    மத்திய மந்திரி நிதின் கட்கரி

    சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரிக்கு கொரோனா

    கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் அதிகரித்து வருகிறது. 

    இதற்கிடையே, கொரோனா பாதிப்பால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதுதொடர்பாக நிதின் கட்கரி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லேசான அறிகுறிகளுடன் கொரோனா பரிசோதனை செய்துள்ளேன். அதில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

    Next Story
    ×