search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

    கொரோனா நோயாளிகளுக்கு ஆன் லைன் மூலம் யோகா பயிற்சி - அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

    கொரோனா தொற்று அதிகரித்தாலும் டெல்லியில் லாக்டவுன் கொண்டு வர மாட்டோம் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும்  நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

    கடந்த சில நாட்களில் கொரோனா பரவல் 25 சதவீதமாக உள்ளது. 22,000 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாங்கள் லாக்டவுன் கொண்டு வரமாட்டோம். வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு யோகா மற்றும் தியான வகுப்புகளை அரசு ஏற்பாடு செய்துள்ளது.  

    ஆன்லைன் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி வழங்கப்படும். இது குறித்த இணையதள முகவரி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.  விரைவில் கொரோனா பாதிப்பு குறையும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு கெஜ்ரிவால் தமது பேட்டியின்போது குறிப்பிட்டார்.

    Next Story
    ×