என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
1.5 லட்சத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு: பிரதமர் மோடி நாளை மறுநாள் அவசர ஆலோசனை
Byமாலை மலர்11 Jan 2022 5:50 AM GMT (Updated: 11 Jan 2022 6:42 AM GMT)
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார்.
ஒமைக்ரான் வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 3-வது அலை உருவாகி கொரோனா பாதிப்பு அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. தினந்தோறும் 10 ஆயிரம், 20 ஆயிரம் என அதிகரித்து வருகிறது. டெல்லி, மகாராஷ்டிர மாநிலத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்றைய அறிவிப்பைவிட இன்று 6 சதவீதம் குறைந்த நிலையில் 1.6 லட்சத்தை கடந்த வண்ணமே உள்ளது.
இதனால் பெரும்பாலான மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. சில தினங்களுக்கு முன் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது தடுப்பூசி பணிகளை விரைவுப்படுத்த வேண்டும், மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதன்பின் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.
இதனால் பெரும்பாலான மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. சில தினங்களுக்கு முன் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது தடுப்பூசி பணிகளை விரைவுப்படுத்த வேண்டும், மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதன்பின் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் நாளை மறுநாள் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தேவைப்பட்டால் மேலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வலியுறுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X