search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 154 கோடியாக உயர்வு

    மேலும் 18 கோடிக்கு மேல் கொரோனா தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படுகின்றன.
    புதுடெல்லி

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி போடும் நடவடிக்கை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது.  முதல் கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  இரண்டு தவணைகளாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. 

    இதனைடுத்து  15 முதல் 18 வயதினருக்கு தடுப்பூசி பணிகள் கடந்த ஜனவரி மூன்றாம் தேதி முதல் துவக்கின.  இதன் காரணமாக தினந்தோறும் செலுத்தப்படும் கொரோனா 'டோஸ்' எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

    இதுவரை 154.32 கோடி அளவில் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மீதம் 18.14 கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு  இந்திய அரசு இலவசமாக கோவிட் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×