search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரியங்கா காந்தி
    X
    பிரியங்கா காந்தி

    குடும்ப உறுப்பினர், ஊழியருக்கு கொரோனா- பிரியங்கா காந்தி தனிமைப்படுத்திக்கொண்டார்

    தனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும், ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் தான் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக பிரியங்கா டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
    லக்னோ:

    சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் தேர்தல் பிரசாரத்தை முன்னின்று வழி நடத்துகிறார், பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.

    அதற்காக லக்னோவுக்கு இடம் பெயர்ந்துள்ள பிரியங்கா, மாநிலம் முழுவதும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், தனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும், ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் தான் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக பிரியங்கா டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

    கொரோனா பரிசோதனையில் தனக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்திருந்தாலும், டாக்டரின் அறிவுரையின் பேரில் தனித்து இருப்பதாகவும், சில நாட்கள் கழித்து மீண்டும் சோதனை செய்து கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர், ஊழியர் விவரத்தை பிரியங்கா காந்தி வெளியிடவில்லை.
    Next Story
    ×