என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பாஜகவின் சாலை மறியலால் டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு
Byமாலை மலர்4 Jan 2022 2:43 AM GMT (Updated: 4 Jan 2022 2:43 AM GMT)
பா.ஜனதா நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் டெல்லியில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நகர முடியாதநிலையில், மக்கள் மெட்ரோ ரெயில்களுக்கு படையெடுத்தனர்.
புதுடெல்லி :
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு புதிய மதுபான கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி, நகரம் முழுவதும் 849 பிரீமியம் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த கொள்கைக்கு எதிராக டெல்லி பா.ஜனதா சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் 15 முக்கிய இடங்களில் நேற்று காலை போராட்டம் தொடங்கியது.
பா.ஜனதா தொண்டர்கள், டெல்லி அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி, சாலைகளை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. போக்குவரத்து முடங்கியது. காலை நேரத்தில் அலுவலகத்துக்கும், கடைகளுக்கும் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
ஆட்டோக்கள், வாடகை கார்களும் இயங்க முடியவில்லை. இதனால், பொதுமக்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு படையெடுத்தனர். மெட்ரோ ரெயில் நிலையங்களின் நுழைவாயில்வரை மக்கள் வரிசையில் நின்றனர். மெட்ரோ ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் நின்றபடி பயணித்தனர்.
‘‘காலை 9 மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்ட நான், 3 மணி நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறேன்’’ என்று ஒரு பயணி கூறினார். மற்றொருவர், ‘‘4 கி.மீ. தூரத்தை கடக்க 3 மணி நேரம் ஆகிவிட்டது’’ என்று கூறினார்.
இருப்பினும், 2 முக்கிய சாலைகளில் மட்டும் நெரிசல் இருந்ததாகவும், அதையும் சரி செய்து விட்டதாகவும் போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி அக்ஷர்தாம் கோவில் அருகே டெல்லி பா.ஜனதா தலைவர் ஆதேஷ் குப்தா தலைமையில் சாலை மறியல் நடந்தது. பொதுமக்கள் பாதிக்கப்பட்டது குறித்து கேட்டபோது ஆதேஷ் குப்தா கூறியதாவது:-
மக்கள் நலனுக்காகத்தான் இந்த போராட்டம் நடக்கிறது. இந்த அவதியை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். டெல்லி அரசு நகரம் முழுவதும் சட்டவிரோதமாக மதுக்கடைகளை திறந்துள்ளது. குடியிருப்புகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளை செயல்பட விட மாட்டோம். இந்த கொள்கையை திரும்பப்பெறும்வரை போராட்டம் நீடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா பா.ஜனதா மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது:-
சட்டவிரோத மது விற்பனை மூலம் டெல்லி பா.ஜனதா தலைவர்களும், சாராய வியாபாரிகளும் ரூ.3 ஆயிரத்து 500 கோடி சம்பாதித்து வந்தனர். இந்த கொள்ளையை அரவிந்த் கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தி இருக்கிறார். அதனால்தான் பா.ஜனதா தலைவர்கள் நடுக்கம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு புதிய மதுபான கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி, நகரம் முழுவதும் 849 பிரீமியம் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த கொள்கைக்கு எதிராக டெல்லி பா.ஜனதா சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் 15 முக்கிய இடங்களில் நேற்று காலை போராட்டம் தொடங்கியது.
பா.ஜனதா தொண்டர்கள், டெல்லி அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி, சாலைகளை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. போக்குவரத்து முடங்கியது. காலை நேரத்தில் அலுவலகத்துக்கும், கடைகளுக்கும் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
ஆட்டோக்கள், வாடகை கார்களும் இயங்க முடியவில்லை. இதனால், பொதுமக்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு படையெடுத்தனர். மெட்ரோ ரெயில் நிலையங்களின் நுழைவாயில்வரை மக்கள் வரிசையில் நின்றனர். மெட்ரோ ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் நின்றபடி பயணித்தனர்.
‘‘காலை 9 மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்ட நான், 3 மணி நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறேன்’’ என்று ஒரு பயணி கூறினார். மற்றொருவர், ‘‘4 கி.மீ. தூரத்தை கடக்க 3 மணி நேரம் ஆகிவிட்டது’’ என்று கூறினார்.
இருப்பினும், 2 முக்கிய சாலைகளில் மட்டும் நெரிசல் இருந்ததாகவும், அதையும் சரி செய்து விட்டதாகவும் போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி அக்ஷர்தாம் கோவில் அருகே டெல்லி பா.ஜனதா தலைவர் ஆதேஷ் குப்தா தலைமையில் சாலை மறியல் நடந்தது. பொதுமக்கள் பாதிக்கப்பட்டது குறித்து கேட்டபோது ஆதேஷ் குப்தா கூறியதாவது:-
மக்கள் நலனுக்காகத்தான் இந்த போராட்டம் நடக்கிறது. இந்த அவதியை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். டெல்லி அரசு நகரம் முழுவதும் சட்டவிரோதமாக மதுக்கடைகளை திறந்துள்ளது. குடியிருப்புகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளை செயல்பட விட மாட்டோம். இந்த கொள்கையை திரும்பப்பெறும்வரை போராட்டம் நீடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா பா.ஜனதா மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது:-
சட்டவிரோத மது விற்பனை மூலம் டெல்லி பா.ஜனதா தலைவர்களும், சாராய வியாபாரிகளும் ரூ.3 ஆயிரத்து 500 கோடி சம்பாதித்து வந்தனர். இந்த கொள்ளையை அரவிந்த் கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தி இருக்கிறார். அதனால்தான் பா.ஜனதா தலைவர்கள் நடுக்கம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X