என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மோடி தன்னை துறவி என கூற முடியாது: சிவசேனா கருத்து
Byமாலை மலர்3 Jan 2022 2:42 AM GMT (Updated: 3 Jan 2022 2:42 AM GMT)
பிரதமரின் பாதுகாப்பும், சவுகரியமும் முக்கியம். ஆனால் இனிமேல் தலைமை வேலைக்காரன் தன்னை துறவி என கூறிக்கொள்ள முடியாது.
மும்பை :
பிரதமர் நரேந்திர மோடி பயன்பாட்டுக்கு சமீபத்தில் மெர்சிடஸ்- மேபேக் ரக சொகுசு கார் வாங்கப்பட்டது. இந்த காரின் மதிப்பு ரூ.12 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் வெளியாகின. இந்தநிலையில் அதிக விலைக்கு பிரதமருக்கு சொகுசு கார் வாங்கிய விவகாரம் குறித்து சிவசேனா கருத்து கூறியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. சாம்னா பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடிக்கு ரூ.12 கோடிக்கு சொகுசு கார் வாங்கப்பட்டு இருப்பதாக கடந்த 28-ந் தேதி ஊடகங்களில் செய்தி வெளியாகியது. தன்னை துறவி, தலைமை வேலைக்காரன் என கூறிக்கொள்ளும் ஒருவர் வெளிநாட்டு காரை பயன்படுத்துகிறார். பிரதமரின் பாதுகாப்பும், சவுகரியமும் முக்கியம். ஆனால் இனிமேல் தலைமை வேலைக்காரன் தன்னை துறவி என கூறிக்கொள்ள முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் குறித்து சஞ்சய் ராவத் கூறுகையில், "மேக்இன் இந்தியா, ஸ்டாட்-அப் இந்தியா போன்ற உள்நாட்டு உற்பத்தி திட்டங்களை தொடங்கிய மோடி தற்போது வெளிநாட்டு காரை பயன்படுத்துகிறார். நாட்டின் முதல் பிரதமர் நேரு இந்தியாவில் தயாரான அம்பாசிடர் காரை தான் பயன்படுத்தினார்.
இதேபோல தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த போதும் இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்களை மாற்றவில்லை" என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி பயன்பாட்டுக்கு சமீபத்தில் மெர்சிடஸ்- மேபேக் ரக சொகுசு கார் வாங்கப்பட்டது. இந்த காரின் மதிப்பு ரூ.12 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் வெளியாகின. இந்தநிலையில் அதிக விலைக்கு பிரதமருக்கு சொகுசு கார் வாங்கிய விவகாரம் குறித்து சிவசேனா கருத்து கூறியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. சாம்னா பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடிக்கு ரூ.12 கோடிக்கு சொகுசு கார் வாங்கப்பட்டு இருப்பதாக கடந்த 28-ந் தேதி ஊடகங்களில் செய்தி வெளியாகியது. தன்னை துறவி, தலைமை வேலைக்காரன் என கூறிக்கொள்ளும் ஒருவர் வெளிநாட்டு காரை பயன்படுத்துகிறார். பிரதமரின் பாதுகாப்பும், சவுகரியமும் முக்கியம். ஆனால் இனிமேல் தலைமை வேலைக்காரன் தன்னை துறவி என கூறிக்கொள்ள முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் குறித்து சஞ்சய் ராவத் கூறுகையில், "மேக்இன் இந்தியா, ஸ்டாட்-அப் இந்தியா போன்ற உள்நாட்டு உற்பத்தி திட்டங்களை தொடங்கிய மோடி தற்போது வெளிநாட்டு காரை பயன்படுத்துகிறார். நாட்டின் முதல் பிரதமர் நேரு இந்தியாவில் தயாரான அம்பாசிடர் காரை தான் பயன்படுத்தினார்.
இதேபோல தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த போதும் இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்களை மாற்றவில்லை" என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X