என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
அதிகரிக்கும் கொரோனா... சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைக்க மத்திய மந்திரி அறிவுறுத்தல்
Byமாலை மலர்2 Jan 2022 12:21 PM GMT (Updated: 2 Jan 2022 12:21 PM GMT)
அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதனை கையாள ஏதுவாக, சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை மந்திரி அறிவுறுத்தினார்.
புதுடெல்லி:
நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், ஏற்கனவே தளர்த்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை பல்வேறு மாநிலங்கள் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். ஒமைக்ரான் அச்சுறுத்தல் மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
நாட்டில் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில் அது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
‘கொரோனா பரிசோதனை, பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல்’ ஆகிய நான்கு செயல்முறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மத்திய சுகாதாரத்துறை மந்திரி வலியுறுத்தி பேசினார்.
“நாம் இதற்கு முன் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போர் புரிந்துள்ளோம். கடந்த காலங்களில் கற்ற பாடங்களை பயன்படுத்தி ஒமைக்ரானுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதனை கையாள ஏதுவாக, சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மாநிலங்கள் கொரோனா கால நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும். மாநிலங்கள் தங்களுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை தெரியப்படுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X