என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மேற்கு வங்காளத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு - நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் மூடல்
Byமாலை மலர்2 Jan 2022 10:24 AM GMT (Updated: 2 Jan 2022 10:24 AM GMT)
அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் மட்டுமே செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாலும், ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாகவும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், ஸ்பாக்கள், சலூன்கள், அழகு நிலையங்கள் நாளை முதல் மூடப்படுகின்றன. உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்களும் நாளை முதல் மூடப்படும். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அனுமதி அளிக்கப்படும்.
அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் மட்டுமே செயல்படும். புறநகர் ரெயில்கள் நாளை முதல் 50% பயணிகளுடன் இரவு 7 மணி வரை மட்டும் இயக்கப்படும்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X