என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
அருணாச்சலப் பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் - மத்திய அரசு உறுதி
Byமாலை மலர்31 Dec 2021 12:02 AM GMT (Updated: 31 Dec 2021 12:02 AM GMT)
அருணாசல பிரதேசத்தின் 15 இடங்களுக்கு புதிதாக பெயர் சூட்டுவதன் மூலம் உண்மையை ஒருபோதும் மாற்ற முடியாது என்று சீனாவிற்கு, இந்தியா பதில் அளித்துள்ளது.
புதுடெல்லி
அருணாசல பிரதேச மாநிலத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள மேலும் 15 இடங்களுக்கு சீன பெயர்களை அந்த நாடு அதிகாரபூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் அருணாசல பிரதேசத்துக்கு உட்பட்ட 8 குடியிருப்பு பகுதிகள், 4 மலைகள், 2 ஆறுகள் மற்றும் ஒரு மலைக்கணவாய் ஆகியவற்றுக்கு சீன, திபெத் மற்றும் ரோமன் எழுத்துகளில் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
சீன அமைச்சரவை மற்றும் மாநில கவுன்சில் வழங்கிய விதிமுறைகளுக்கு இணங்க இந்த பெயர்கள் சூட்டப்பட்டு இருப்பதாக சீன அரசு
தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டும் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த 6 பகுதிகளுக்கு சீனா புதிய பெயர் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சீன அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வருகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பெயர்களை ஒதுக்குவது இந்த உண்மையை மாற்றாது என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது.
அருணாசல பிரதேச மாநிலத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள மேலும் 15 இடங்களுக்கு சீன பெயர்களை அந்த நாடு அதிகாரபூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் அருணாசல பிரதேசத்துக்கு உட்பட்ட 8 குடியிருப்பு பகுதிகள், 4 மலைகள், 2 ஆறுகள் மற்றும் ஒரு மலைக்கணவாய் ஆகியவற்றுக்கு சீன, திபெத் மற்றும் ரோமன் எழுத்துகளில் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
சீன அமைச்சரவை மற்றும் மாநில கவுன்சில் வழங்கிய விதிமுறைகளுக்கு இணங்க இந்த பெயர்கள் சூட்டப்பட்டு இருப்பதாக சீன அரசு
தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டும் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த 6 பகுதிகளுக்கு சீனா புதிய பெயர் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சீன அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வருகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பெயர்களை ஒதுக்குவது இந்த உண்மையை மாற்றாது என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X