search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    குல்காம் மாவட்டத்தில் மிர்கமா என்ற கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் அந்த கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் நவ்காம் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று மாலை ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். தீவிர தேடுதல் வேட்டையின் போது 3 பயங்கரவாதிகள் அங்கு பதுங்கி இருப்பதை கண்டனர்.

    இதையடுத்து பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. நீண்ட நேர சண்டைக்கு பிறகு 3 தீபயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    இந்த சண்டையில் பாதுகாப்புப் படையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சுட்டுவீழ்த்தப்பட்ட 3 பயங்கரவாதிகளில் 2 பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள். ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி.

    இதற்கிடையே குல்காம் மாவட்டத்தில் மிர்கமா என்ற கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் அந்த கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    நேற்று ஒரே நாளில் காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த 6 பயங்கரவாதிகளும் ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

    சுட்டுக்கொல்லப்பட்ட 6 பயங்கரவாதிகளில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து 4 பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    மற்ற 2 பயங்கரவாதிகள் யார் என்று விசாரணை நடந்து வருவதாக காஷ்மீர் மாநில போலீஸ் உயர் அதிகாரி விஜயகுமார் தெரிவித்தார்.
    Next Story
    ×