என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்த மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைப்பு: ஆனால்...
Byமாலை மலர்29 Dec 2021 10:48 AM GMT (Updated: 29 Dec 2021 12:25 PM GMT)
மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்கள் வரியை குறைத்தன.
ராஞ்சி:
பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், கடந்த மாதம் மத்திய அரசு கலால் வரியை குறைத்தது. பெட்ரோல் மீதான வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான வரியில் 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. இதேபோல் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தன.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
‘பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் மீது லிட்டருக்கு 25 ரூபாய் நிவாரணமாக அரசாங்கம் வழங்கும். ஜனவரி 26ம் தேதி முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரும்’ என முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X