என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்தியாவில் 578 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு
Byமாலை மலர்27 Dec 2021 4:33 AM GMT (Updated: 27 Dec 2021 4:33 AM GMT)
அதிகபட்சமாக புதுடெல்லியில் 142 பேர் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளது இதுவரை 151 பேர் சிகிச்சைக்கு பின் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக டெல்லியில் 142 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 141 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் 49, ராஜஸ்தான் 43, தெலங்கானா 41, கர்நாடகாவில் 31 பேர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கிறது.
இன்று காலை நிலவரப்படி மேலும் 6,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 7,141 பேர் சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளனர். மொத்தம் 75,7841 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளது இதுவரை 151 பேர் சிகிச்சைக்கு பின் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 19 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்த மாநிலத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 19 மாநிலங்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி மேலும் 6,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 7,141 பேர் சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளனர். மொத்தம் 75,7841 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X