என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
சாமானிய மக்கள் பயன் பெறும் வகையில் பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார் - அமித் ஷா புகழாரம்
Byமாலை மலர்25 Dec 2021 11:17 AM GMT (Updated: 25 Dec 2021 11:17 AM GMT)
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னரே ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
புதுடெல்லியில் நடைபெற்ற நல்லாட்சி தின நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பேசியதாவது:
மத்தியில் நல்லாட்சி கிடைக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் நீண்ட காலம் காத்திருந்தனர். அதை பிரதமர் மோடி அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக வழங்கி வருகிறது.
நீண்ட காலத்திற்கு முன்பே நாங்கள் சுதந்திரம் பெற்று விட்டோம், ஆனால் நல்லாட்சி எப்போது கிடைக்கும், என்று மக்கள் கூறினர். நல்லாட்சி இல்லாததால், நாட்டின் ஜனநாயக அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை படிப்படியாக குறைந்தது. ஆனால், பிரதமர் மோடி நல்லாட்சியை அடிமட்டம் வரை கொண்டு சென்றதன் மூலம், ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நல்ல நிர்வாகத்தை கொடுத்து வருவதை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர். இது இந்தியாவின் முகத்தையே மாற்றி விட்டது.
2014ம் ஆண்டுக்கு முன்னர் பல ஆட்சிகள் மாறின. பல அரசுகள் வந்தன. பல சென்றன. ஆனால் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சியை நடத்த மட்டும் வரவில்லை. நாட்டை மாற்றி அமைக்க வந்துள்ளார் என்று மக்கள் நினைக்கின்றனர். இதற்கு முன்னர் ஆண்ட அரசுகள் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டே செயல்பட்டன. இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X