என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
சட்டசபை வளாகம் அருகே தற்கொலைக்கு முயன்ற பெண் - மும்பையில் பரபரப்பு
Byமாலை மலர்24 Dec 2021 12:27 PM GMT (Updated: 24 Dec 2021 12:27 PM GMT)
உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை, போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் வழக்கம்போல் மும்பையில் சட்டசபை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 46 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், சட்டசபை வளாகம் அருகே திடீரென தற்கொலைக்கு முயன்றார். தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்தப் பெண் நாசிக்கைச் சேர்ந்த கட்டுமான தொழில் செய்து வரும் மதுசூதனன் என்பவரின் மனைவி ராஜலட்சுமி என்பது தெரியவந்தது. தன் கணவரிடம் கடன் வாங்கிய நபர் கடனை திரும்ப செலுத்த மறுப்பதாகவும், காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், அரசின் கவனத்தை ஈர்க்க தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அந்த பெண் கூறி உள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் வழக்கம்போல் மும்பையில் சட்டசபை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 46 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், சட்டசபை வளாகம் அருகே திடீரென தற்கொலைக்கு முயன்றார். தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்தப் பெண் நாசிக்கைச் சேர்ந்த கட்டுமான தொழில் செய்து வரும் மதுசூதனன் என்பவரின் மனைவி ராஜலட்சுமி என்பது தெரியவந்தது. தன் கணவரிடம் கடன் வாங்கிய நபர் கடனை திரும்ப செலுத்த மறுப்பதாகவும், காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், அரசின் கவனத்தை ஈர்க்க தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அந்த பெண் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X