search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிரா சட்டசபை
    X
    மகாராஷ்டிரா சட்டசபை

    சட்டசபை வளாகம் அருகே தற்கொலைக்கு முயன்ற பெண் - மும்பையில் பரபரப்பு

    உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை, போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் வழக்கம்போல் மும்பையில் சட்டசபை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 46 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், சட்டசபை வளாகம் அருகே திடீரென தற்கொலைக்கு முயன்றார். தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்தப் பெண் நாசிக்கைச் சேர்ந்த கட்டுமான தொழில் செய்து வரும் மதுசூதனன் என்பவரின் மனைவி ராஜலட்சுமி என்பது தெரியவந்தது. தன் கணவரிடம் கடன் வாங்கிய நபர் கடனை திரும்ப செலுத்த மறுப்பதாகவும், காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், அரசின் கவனத்தை ஈர்க்க தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அந்த பெண் கூறி உள்ளார்.
    Next Story
    ×