என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கேரளாவில் சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டணை
Byமாலை மலர்23 Dec 2021 5:24 AM GMT (Updated: 23 Dec 2021 5:24 AM GMT)
கேரளாவில் சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்ட வாலிபருக்கு 25 ஆண்டு சிறைத் தண்டணை விதித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் சிறுமி ஒருவர் படித்து வந்தார்.இந்த நிலையில் அவரின் நடவடிக்கைகளில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவரின் பெற்றோர் விசாரித்தபோது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலிப்பதாக ஏமாற்றி பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டதும் மேலும் அவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருவனந்தபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமி அளித்த தகவலின்பேரில் வய்யமூலா வல்லக்கடவு பகுதியை சேர்ந்த அஸ்வின் பிஜு(வயது 25) என் பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி ஜெயகிருஷ்ணன் வழக்கை விசாரித்து வந்தார்.இந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அதில், சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்ட அஸ்வின் பிஜுவுக்கு 25 ஆண்டு சிறைத் தண்டணை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இத்தொகையை வழங்காவிட்டால் மேலும் கூடுதலாக ஒரு ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X