என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோரின் சொத்துகளை விற்று ரூ.13,100 கோடி மீட்பு -நிதி மந்திரி தகவல்
Byமாலை மலர்20 Dec 2021 4:51 PM GMT (Updated: 20 Dec 2021 4:51 PM GMT)
கடனைத் திருப்பிச் செலுத்தாமல், நாட்டை விட்டு வெளியேறியவர்களிடம் இருந்து பணத்தை வசூலித்து பொதுத்துறை வங்கிகளில் சேர்த்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
பெண்களின் வங்கி கணக்குகள் அதிகரித்து வருகின்றன. பெண்களின் கல்வி முன்னேற்றம் அதிகரித்துள்ளது. மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் மானிய தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் கொரோனா காலத்தில் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
வங்கி கடனை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி, சோக்சி உள்ளிட்டோரின் சொத்துக்கள் விற்கப்பட்டு, அதன்மூலம் ரூ,13,000 கோடியை வங்கிகள் மீட்டுள்ளன. கடந்த ஜூலை 16ம் தேதி மல்லையா மற்றும் பிறருக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்தன்மூலம் ரூ.792 கோடி மீட்கப்பட்டது சமீபத்திய மீட்பு ஆகும்.
பொதுத்துறை வங்கிகள் இணைந்து கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் ரூ.5.49 லட்சம் கோடியை வசூலித்துள்ளன. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள், கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு வெளியேறியவர்களிடம் பணத்தை வசூலித்து பொதுத்துறை வங்கிகளில் சேர்த்துள்ளோம். அதனால் வங்கிகள் இன்று பாதுகாப்பாக உள்ளன. பொதுத்துறை வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது.
சமையல் எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநில அரசுகளைப் பொருத்தவரை கணிசமான அளவு பண இருப்பு உள்ளது. இரண்டு மாநிலங்களிடம் மட்டுமே பண இருப்பு எதிர்மறையாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X