
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு, அதிகாலை 4 மணிக்கு மங்கல வாத்தியங்கள், அதிகாலை 4.15 மணிக்கு திருமஞ்சன சேவை, அதிகாலை 4.30 மணிக்கு கோபூஜை, சுப்ரபாத சேவை இல்லை. அதற்கு பதிலாக தேவாரம் பாடப்படுகிறது. அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு அனுமதியின்றி முதல் கால அபிஷேகம், 2-ம் கால மற்றும் 3-ம் கால அபிஷேகம் கோவில் சார்பில் மட்டுமே நடத்தப்படுகிறது. காலை 7 மணிக்கு துணை சன்னதிகளுக்கு நைவேத்தியம்.
அதைத்தொடர்ந்து கொரோனா தொற்று விதிமுறைக்கு உட்பட்டு காலை 7.30 மணிக்கு ஆண்டாள் (உற்சவ மூர்த்தி) கோவிலுக்குள் ஊர்வலம் நடத்தப்படும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு பிரதோஷ கால அபிஷேகம் நடக்கிறது.
வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கட்கிழமை போன்ற நாட்களில் இரவு 9 மணிக்கும், செவ்வாய், புதன், வியாழக்கிழமை போன்ற நாட்களில் இரவு 8.30 மணிக்கு பள்ளியறை பூஜை நடத்தப்படுகிறது.
மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.