என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிப்பு
Byமாலை மலர்15 Dec 2021 2:49 PM GMT (Updated: 15 Dec 2021 2:49 PM GMT)
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பொது மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தலாம் என புதுச்சேரி அரசு குறிப்பிட்டுள்ளது.
புதுச்சேரி:
கொரோனா பரவல் அச்சுறுத்தலால் தமிழகத்தில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரியில் ஏற்கனவே அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 2ம் தேதிவரை நீடிக்கப்பட்டுள்ளன. எனினும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு டிசம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதே போல் புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள் ஜனவரி ஒன்றாம் தேதி அதிகாலை 2 மணி வரை மட்டும் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை கொண்டாட்டங்களை முன்னிட்டு காவல்துறையிடம் அனுமதி பெற்று கூடுதல் நேரம் மதுக்கடைகளை திறக்கலாம். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பொது மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தலாம் என புதுச்சேரி அரசு குறிப்பிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X