என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
எம்.பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற பேச்சுவார்த்தை - மத்திய அரசு தகவல்
Byமாலை மலர்14 Dec 2021 11:12 AM GMT (Updated: 14 Dec 2021 12:37 PM GMT)
எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த விவகாரம் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தன. இது குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் பேசியதாவது,
கடும் அமளிக்கு இடையே பாராளுமன்றத்தை நடத்துவது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. இன்று காங்கிரஸ் உள்பட பிற கட்சிகளின் 50 எம்.பி.க்கள் கேள்வி நேரத்தின் போது விவாதிக்க கோரிக்கை விடுத்து நோட்டீஸ் கொடுத்திருந்தனர். அவை தலைவர் 26 எம்.பி.க்களுக்கு அனுமதி வழங்கினார்.
திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, பிஜு ஜனதாதள், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உள்பட பிற கட்சிகள் இந்த விவாதத்தில் கலந்து கொண்டன. எந்த விவகாரம் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. நான் காங்கிரஸ் தலைவர்கள் உள்பட மற்றவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெறுவது தொடர்பாக அந்த எம்.பிக்களிடம் தனித்தனியாக அரசு பேசி வருகிறது. நான் ஒன்றை தெளிவாக சொல்கிறேன். அவர்கள் குறைந்த பட்சம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X